குன்னூரில் தண்ணீர் தேடி குட்டிகளுடன் உலா சென்ற யானைக்கூட்டத்துடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரை ஆக்ரோசத்துடன் துரத்தும் யானையின் வீடியோ.!

0 1634

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சாலையில் உலா வந்த காட்டுயானைகளுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞர்களை அந்த யானைகள் துரத்தியதால் தலைதெறிக்க ஓடி உயிர்தப்பினர்.

கடந்த மூன்று வார காலமாக குட்டிகளுடன் காட்டு யானை கூட்டம் கரும்பாலம் அருகே தனியார் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டு உள்ளது. அந்த  யானைக் கூட்டம் தண்ணீர் தேடி சாலையை கடக்கும் போது அவ்வழியாக சென்ற இளைஞர்கள் ஆபத்தை உணராமல் அதனுடன் செல்ஃபி புகைப்படங்கள் எடுக்க முயன்றனர்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு யானை ஆக்ரோசமடைந்து அந்த இளைஞரை துரத்த தொடங்கியது. அந்த வீடியோ வெளியாகி இணையதளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments